ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதிகள் பட்டினப்பிரவேசம்
சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.
ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோற்சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்னை, தாம்பரம் கிழக்கு ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்று) இங்கு வருகை புரிந்துள்ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

