மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு சென்​னை​யில் கோயில் குளங்​கள், மெரினா கடற்​கரை உள்​ளிட்ட நீர்​நிலைகளில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் குவிந்​து, முன்​னோருக்கு தர்ப்​பணம் செய்து வழிபட்​டனர்.

அமா​வாசை நாளில் விரதம் இருந்து தர்ப்​பணம் கொடுத்​தால் முன்​னோரின் ஆசி கிடைக்​கும் என்​பது இந்​துக்​களின் நம்​பிக்​கை. இதில் ஆடி, புரட்​டாசி, தை மாதங்​களில் வரும் அமா​வாசை நாள் விசேஷ​மான​தாக கருதப்​படு​கிறது. அதி​லும் குறிப்​பாக, புரட்​டாசி​யில் வரும் அமா​வாசை, மகாளய அமா​வாசை எனப்​படு​கிறது. இதற்கு முந்​தைய 15 நாட்​களும், அதாவது, ஆவணி மாத பவுர்​ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி அடுத்து வரும் 15 நாட்​களும் ‘மகாளய பட்​சம்’ எனப்​படு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.