கொடியேற்றத்துக்கு தர்பை தயார்: திருப்பதி பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை (செப். 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை புதன்கிழமை மாலை கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்படுகிறது. இதற்காக கொடி மரத்தில் சுற்றிலும் அமைக்கப்பட உள்ள புனித தர்பை புற்களையும் பிரம்மோற்சவ கொடியை கட்டுவதற்கான புனித கயிற்றையும் நேற்று தேவஸ்தான ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

