மலையப்ப சுவாமிக்கு உலர் பழ, மலர் அலங்காரம்
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் நாயகனான உற்சவர் மலையப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. உலர் பழங்கள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களும் தினமும் பிற்பகலில் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர்களுக்கு திருமஞ்சன சேவை (அபிஷேகம்) நடத்துவது ஐதீகம். இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்படும். பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளும், 7-ம் நாளும் உற்சவ மூர்த்திகளுக்கு இவ்வாறு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்துவது ஐதீகம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

