திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி அஹோபில மடத்​தில் சுவாமி தேசிகன் உற்​சவத்​தையொட்டி தேரோட்​டம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். திரு​வல்​லிக்​கேணி தேரடி தெரு​வில் உள்​ள அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திரமகா தேசிகன் நினை​வாக ஆண்​டு ​தோறும், உற்சவ விழா கொண்டாடப்படும்.

அந்​த வகையில், இந்த ஆண்டு ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்​திர மகா தேசிகன் உற்​சவம் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. உற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் கடந்த 28-ம் தேதி நடை​பெற்​றது. இந்த ஆண்டு உற்​சவத்​தில் புதி​தாக திருத்​தேர் ஏற்​பாடு செய்​யப்​பட்டு முதல்​முறை​யாக தேரோட்​டம் நடந்​தது குறிப்​பிடத்​தக்​கது. இந்த நிகழ்​வில், அஹோபில மடத்​தின் 46-வது பட்​டத்து அழகிய சிங்​கர் ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்​க​நாத யதீந்​திர மஹா தேசிகன் சுவாமிகள் பங்​கேற்று பக்​தர்​களுக்கு ஆசி வழங்​கி​னார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.