சபரிமலையில் தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குமுளி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆவார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று (அக்.21) மாலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த திரவுபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

