திருமங்கலம் பூலோகநாயகி கோயில்: மாங்கல்ய பாக்கியம் அருளும் அற்புதம்!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமங்கலத்தில் உள்ள ஸ்ரீ பூலோகசுவாமி கோயில், திருமணஞ்சேரி திருக்கல்யாணத்துக்குப் பிறகு சிவனும் பார்வதியும் சப்தபதி எடுத்த தலமாகும். இங்குள்ள அன்னை ஸ்ரீ பூலோகநாயகி மாங்கல்ய பலம் அருளும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார்.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள பூலோகநாயகியை வழிபட்டால் சுப பலன்கள் கிடைக்கும். திருமணத்திற்காக திருமாங்கல்யம் செய்ய திருமகள் குபேரனிடம் பொன் பெற்றது இத்தலத்தில்தான் என்பதால், இங்கு மாங்கல்யத்தை பூஜிப்பது விசேஷம். இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோலத்தை தரிசிப்பவர்களுக்குத் திருமண பாக்கியம் விரைந்து கைகூடும்.
மேலும், இத்தலம் சோமாஸ்கந்த க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது. நந்தி விரைந்து பலன் தர காட்சியளிப்பது, ஆயுள் விருத்திக்காக பிரயோக காலசம்ஹார மூர்த்திக்கு மிருத்யுஞ்சய ஹோமம் செய்வது, மற்றும் மங்கள மகாலட்சுமியுடன் ஞானசரஸ்வதி அருள்பாலிப்பது போன்ற சிறப்புகளும் இக்கோயிலில் உள்ளன.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

