சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

இந்திய டி20 அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்படும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக, முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் நேரலையில் உணர்ச்சிப்பூர்வமாக குரல் கொடுத்துள்ளார்.

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சுப்மன் கில் 0 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், பத்ரிநாத் அணி நிர்வாகத்தை கேள்வி எழுப்பினார். 

 

டி20 கிரிக்கெட்டில் மூன்று சதங்கள் அடித்த சாம்சன் போன்ற திறமையான வீரர் பெஞ்சில் அமர்ந்திருப்பது வேதனை அளிப்பதாகவும், துணை கேப்டனாக இருக்கும் கில்லுக்கு இவ்வளவு மோசமான புள்ளிவிவரங்களுடன் ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் வினவினார்.

 

முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பத்ரிநாத்தின் கருத்தை ஆமோதித்தார். சாம்சனின் 183 ஸ்ட்ரைக் ரேட்டை சுட்டிக்காட்டிய அவர், அணி தேர்வில் நிர்வாகம் குழப்பத்தில் இருப்பதாகவும், நியாயமற்ற முறையில் சாம்சன் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

 

கில்லின் மோசமான ஃபார்ம் இருந்தபோதிலும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.