அனிருத் இசையில்லாமல் படம் பண்ண மாட்டேன்: லோகேஷ் கனகராஜ் உறுதி

“வரும் காலங்களில் எந்தவொரு படமும் அனிருத் இசையில்லாமல் பண்ண மாட்டேன். ஒருவேளை அனிருத் திரைத்துறையில் இருந்து விலகிவிட்டால் அந்த தருணத்தில் மட்டுமே வேறு ஒருவரை யோசிப்பேன்.” என்று லோகேஷ் கனகராஜ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

’கூலி’ வெளியான அடுத்த நாள் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அப்படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் லோகேஷ் கனகராஜ். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், திரையரங்கிற்கு சென்று மக்களோடு ‘கூலி’ படத்தினை கண்டுகழித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.