புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சஏ அணிகள் தடுமாற்றம்!

சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் சென்னையில் நேற்று தொடங்கின. செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - சத்தீஷ்கர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 83.2 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாபா இந்திரஜித் 78, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 68, விமல்குமார் 54 ரன்கள் சேர்த்தனர். சத்தீஸ்கர் அணி சார்பில் ஷசாங்க் திவாரி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய சத்தீஸ்கர் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.