வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி.. தொடரை இழக்கின்றதா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றிக்கு மிக அருகில் உள்ளதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவி வருகிறது.

 

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 224 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களும் எடுத்தது.

 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்ததால், வெற்றி பெற அவர்களுக்கு 374 ரன்கள் தேவைப்பட்டது.

 

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 35 ரன்களே தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் இருப்பதால், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில், ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அபாரமாக விளையாடி சதமடித்து, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

 

இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில், எஞ்சிய 35 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி இந்த தொடரை வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு இது மீண்டும் ஒரு தோல்வியாக அமைய வாய்ப்பு உள்ளது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.