ஏன் அந்தப் படங்களில் நடிக்க மறுத்தார் கங்கனா?
2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யபின் கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கங்கனா ரனாவத்.
தற்போது ஏற்கெனவே ஒப்பந்தமான அனுராக் காஷ்யபின் இமாலி என்ற படத்திலிருந்து விலகியுள்ளார்.
இது தவிர பங்கா என்ற படத்திலிருந்தும் விலகியுள்ளார்.

இவை இரண்டும் கடந்த ஆண்டில் ஒப்பந்தமானவை.
இடையில் மணிகர்னிகா படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலையால் இந்த இரு படங்களிலிருந்தும் விலகியவர், தற்போது சொந்த படத் தயாரிப்பு காரணமாக புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

தன்னை அறிமுகப்படுத்திய அனுராக் காஷ்யப் படத்தையும் புறக்கணித்ததாக கூறும் கங்கனா, ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் மென்டல் ஹைக்யா மற்றும் ஜெயலலிதா வரலாற்று படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


