கேங்ஸ்டர் கதையில் ஹீரோவாக நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!
நாயகனாக அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தகவலாக வெளியானாலும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதனிடையே, நாயகனாக அறிமுகமாக இருப்பது குறித்து லோகேஷ் கனகராஜ், “அன்பறிவ் இயக்கத்தில் நானும் அனிருத்தும் இணைந்து பண்ணுவதாக இருந்தது. ஆனால், நேரம் சரியாக அமையவில்லை. இப்போது அன்பறிவ் இயக்கத்தில் கமல் சார் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பலர் கதைகள் கூறிக்கொண்டே இருந்தார்கள். அவற்றை எல்லாம் வேண்டாம் என்று கூறிவந்தேன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


