காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து நித்திஷ் குமார் ரெட்டி விலகல்
மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி நேற்று முன்தினம் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த போது காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர், எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


