கமலை விடுங்க... புராணப்படங்களில் ரஜினியாவது நடிச்சிருக்கலாமே... ஏன் நடிக்கல?

80 காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகம் ஆரோக்கியமாக இருந்தது. கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களாக வெளிவந்தன. அப்போது எந்த ஒரு நடிகர் நடித்தாலும் கதை சூப்பராக இருந்தால் படம் ஓடும் என்று இருந்தது. அந்த நடிகர் எப்படி நடித்தாலும் ஓடும் என்று இல்லை. படத்தின் கதை, நடிப்பு, காமெடி, பைட், சென்டிமென்ட் என எல்லாமே சூப்பராக இருக்க வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட படங்கள் நிறைய வந்தன.

கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், மோகன், கார்த்திக், ராம்கி, அர்ஜூன் என பல ஹீரோக்களின் படங்கள் வெற்றிவாகை சூடின. அதே காலகட்டத்தில் புராணப்படங்களும் வந்து சூப்பர்ஹிட் அடித்தன. சிவாஜி தான் பெரும்பாலும் புராணப்படங்களில் நடித்து இருந்தார். விஜயகாந்த் கூட மீனாட்சி திருவிளையாடல் என்ற ஒரு புராணப்படத்தில் நடித்துள்ளார்.

ரஜினி, கமல் இருவரும் புராணப்படங்களில் நடிக்காததற்கு அந்த நடிகருடைய மார்க்கெட் கூட ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். அவர்களைப் பொருத்தவரைக்கும் மிகக்குறுகிய காலத்திலேயே மிக உயர்ந்த சம்பளம் வாங்குற அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்.

அதனால அந்த சம்பளத்தைக் கொடுத்து ஒரு திரைப்படத்தை எடுத்தா அது எந்தளவு வசூலிக்கும் என்கிற சந்தேகம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் மத்தியில் இருந்த காரணத்தினால்தான் புராண கதாபாத்திரங்களில் அவர்களை நடிக்க வைக்கல.


இந்த இருவரில் கமல் புராணப்பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பது நீங்களே அறிந்த விஷயம். ரஜினிகாந்த் அப்படிப்பட்ட படங்களில் நடித்திருக்கக்கூடும். அவருக்கு எதிராக அமைந்தது நான் குறிப்பிட்டு இருப்பதைப் போல மார்க்கெட் தான் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

கமல் கூட தசாவதாரம், காதலா காதலா போன்ற படங்களில் ஒரு சில சீன்களில் பக்தி இலக்கியம் சம்பந்தமாக நடித்து இருந்தார். இவ்வளவுக்கும் அவர் ஒரு நாத்திகவாதி. படத்திற்கு தேவை என்ற பட்சத்தில் நடித்தார். சிவன் வேடமிட்டு ரஜினியும் ஒரு படத்தில் பைக்கில் வருவார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.