பிரபு மகன் போல வெற்றி ஓபனிங் இருக்குமா?.. கேப்டன் மகனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி இதுதானாம்!..

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015ம் ஆண்டே சகாப்தம் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. அடுத்ததாக 2018ல் அவர் நடித்த மதுர வீரன் படம் வெளியானது. அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமான போது கும்கி யானைகளை வைத்து கும்கி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு அந்த படம் பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது. ஆனால், தாத்தா, அப்பாவை போல தொடர்ந்து அவரா வெற்றிப் படங்களை கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில், யானைகளுடன் ரொம்பவே கஷ்டப்பட்டு உடல் உழைப்பை போட்டு ஆளே மாறி சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படம் ஒரு வழியாக வரும் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


கடந்த மாதம் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் வெளியாகும் போதே படை தலைவன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாட்டில் கேப்டன் சினி கிரியேஷனே சண்முக பாண்டியன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

மற்றவர்கள் யாரும் வாங்கி வெளியிட மறுத்துவிட்ட நிலையில் தான் படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகிவிட்டதா அல்லது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே மகனின் கம்பேக் படத்தை வெளியிடும் முடிவுக்காக காத்திருந்து ஜூன் 13ம் தேதி வெளியிடுகின்றனரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

கேப்டன் விஜயகாந்த் போலவே அவரது மகனும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என திரை பிரபலஙக்ளும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த படம் ஹிட் ஆனால், ரமணா 2 படத்தையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவேன் என உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.