‘சுப்பிரமணியபுரம்’ திரைப்பட நடிகர் மொக்கச்சாமி காலமானார்
மதுரை: ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்பட நடிகர் மதுரை இலைக்கடை முருகன் (மொக்கச்சாமி) உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 4) காலமானார். அவருக்கு வயது 78.
மதுரை மூன்று மாவடி பகுதியில் வசித்தவர் இலைக்கடை முருகன். இவரது தந்தை முத்தையா நாடக கம்பெனி நடத்தியவர். இவருடைய 7வது மகன் முருகன். ஏற்கெனவே நெல்பேட்டை மார்க்கெட்டில் இலை வியாபாரம் செய்த இவர், தற்போது மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இலைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த இயக்குநரும், நடிகருமான சசிகுமாருடன் பழக்கம் இருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

