‘நான் கோலியின் பெரிய ரசிகன்; ஆர்சிபி பட்டம் வெல்ல வேண்டும்’ - ரிஷி சுனக் ஓபன் டாக்
அகமதாபாத்: முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன் நான் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். அதோடு நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி பட்டம் வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் காண அவர் அகமதாபாத் வந்துள்ளார். மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுப்பார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


