இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

இந்தியாவின் U16 டேவிஸ் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து பெற்ற சமீபத்திய வெற்றியை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம் வீரர், இந்திய வீரரிடம் மரியாதையின்றி நடந்துள்ளார்.

 

 கஜகஸ்தானின் ஷைம்கெண்டில் நடைபெற்ற ஆசிய-ஓசியானியா ஜூனியர் டேவிஸ் கோப்பை (U-16) போட்டியில், 11வது இடத்துக்கான பிளேஆஃப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வென்றது. ப்ரகாஷ் சரண் மற்றும் தவிஷ் பாவா இருவரும் தங்களது ஒற்றையர் ஆட்டங்களில் நேரடியான செட்களில் வெற்றி பெற்றனர்.

 

இந்நிலையில், போட்டிக்கு மூன்று நாட்கள் பிறகு வெளிவந்த வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர், தனது இந்திய வீரரை நோக்கி இரண்டு முறை ஆபாசமான கைசைக்களை செய்தபின்பு, அவமதிப்பான முறையில் நடந்து கொண்டது அந்த வீடியோவில் உள்ளது. இந்த நிகழ்வு விளையாட்டு ஒழுங்குக்கு எதிரானது என கூறி, பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்திய வீரர் தனது அமைதியை காப்பாற்றி விளையாட்டு மதிப்பை நிலைநாட்டியதற்காக, சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.