நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது ஏன்? - குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசிய நிலையில் 13-வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷால் படேல், ஹென்ரிச் கிளாசன் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இந்த ரன் அவுட் சர்ச்சைக்குரிய முறையில் இருந்தது. ஏனெனில் ஸ்டெம்புகளுக்கு முன்பு இருந்து பந்தை பிடித்த கிளாசன் பந்தை ஸ்டெம்புகளை நோக்கி தள்ளினார். அப்போது பந்து விலகிய நிலையில் கிளாசனின் கையுறை ஸ்டெம்பில் பட்டு பெய்ல்ஸ் விழுந்தது. 3-வது நடுவர் பலமுறை இந்த காட்சிகளை ரீப்ளேவில் பார்த்துவிட்டு அவுட் கொடுத்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


