தோனி செய்த தவறும்… வீணான 9 பந்துகளும்… | தொடர்ந்து 2-வது முறையாக லீக் சுற்றுடன் மூட்டைகட்டியது சிஎஸ்கே
ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது சிஎஸ்கே அணி. கடந்த சீசனிலாவது கடைசி லீக் ஆட்டம் வரை தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருந்தது சிஎஸ்கே அணி. ஆனால் இம்முறை இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் இப்போது மூட்டைகட்டியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முடிவுரை எழுதியது பஞ்சாப் கிங்ஸ் அணிதான்.
ஐபிஎல் வரலாற்றில் அந்த அணி இதுபோன்ற நெருக்கடியான நிலையை சந்திப்பது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக 18 சீசன்களில் சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 4-வது முறையாகும். 2020, 2022, 2024-ம் ஆண்டுகளிலும் அந்த அணி லீக் சுற்றை கடக்கவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


