யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா? - சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடி சதம் விளாசிய ‘இடது கை சேவாக்’
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் இடது கை தொடக்க அதிரடி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சைப் புரட்டி எடுத்து ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவிரைவு சதத்தை விளாசினார். 39 பந்துகளில் சதம் கண்டு அவர் யூசுப் பதானின் 37 பந்து சதத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இவர் தனி நபராக சிஎஸ்கேவை தோற்கடித்தார் என்றால் மிகையாகாது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன, இவரோ மறுமுனையில் தனக்கேயுரிய ஓர் உலகில் வாழ்ந்து கொண்டு அதிரடி சிக்சர்களை சிஎஸ்கேவின் நலிந்த பவுலிங்குக்கு பரிசாக வழங்கிக் கொண்டிருந்தார். நஜாஃப்கரின் நவாப் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாகை செல்லமாக அழைப்பதுண்டு, சேவாக் போலவே பிரியான்ஷ் ஆர்யாவும் டெல்லி பிளேயர்தான். டெல்லி பிரீமியர் லீகில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

