Jaiswal: எனக்குக் கடினமாகத்தான் இருக்கிறது; ஆனால்... - கோவா அணிக்கு மாறும் ஜெய்ஸ்வால்

ரஞ்சிக் கோப்பைத் தொடரில் மும்பை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இப்போது கோவா அணியில் சேர இருக்கிறார்.

இந்நிலையில் அணி மாறியது குறித்து ஜெய்ஸ்வால் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர், "அணி மாறுவது எனக்கு மிகவும் கடினமான முடிவாகத்தான் இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் இந்த இடத்தைப் பிடிப்பதற்கு மும்பைதான் காரணம்.

இந்த நகரம்தான் என்னை உருவாக்கியது. முழுவதும் எம்.சி.ஏ-க்கு (மும்பை கிரிக்கெட் அசோசியேஷன்) நான் கடன்பட்டவனாக இருப்பேன்.

ஜெய்ஸ்வால்

கோவா எனக்குப் புதிய வாய்ப்பைத் தருகிறது. அதை நான் ஏற்றுக்கொண்டேன். மேலும் என்னைத் தலைமைப் பொறுப்பில் பங்களிப்பு செய்யும் வகையில் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்படுவதே எனது முதல் இலக்கு. இந்திய அணிக்காக விளையாடாத சமயங்களில் கோவாவுக்காக விளையாடுவேன். அணி வீரர்களைச் சிறந்த முறையில் தயார்ப்படுத்துவேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.