நியூஸிலாந்துடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?
துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தனது பிரிவில் முதலிடத்துடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். இந்திய அணி அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை சந்திக்கக்கூடும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


