அடுத்தடுத்து இரண்டு போட்டிகள்… இந்திய அணியில் இரு வீரர்களுக்கு தசைபிடிப்பு!
இந்திய அணி நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி போட்டிகள் மட்டும் துபாயில் நடப்பதால் அங்குள்ள சூழல் இந்திய அணியினருக்கு சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் குறுகிய இடைவெளியில் இரண்டு போட்டிகளை ஆடியதால் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்திய அணிக்கு அடுத்த போட்டி மார்ச் 2 ஆம் தேதிதான் என்பதால் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் அதிகமாக பயிற்சியில் ஈடுபடாமல் வீரர்கள் ஓய்வெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


