அடுத்த வீட்டுப் பெண்: இது அன்றைய ரொமான்டிக் காமெடி - ‘கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே!’

தமிழ் சினிமாவில் சீரியஸான மன்னர் கதைகளும் குடும்பக் கதைகளும் உருவாகி வந்த ஆரம்ப காலத்திலிருந்தே நகைச்சுவைப் படங்களும் உருவாகி வந்தன. அது போன்ற படங்களுக்குப் பார்வையாளர்கள் எப்போதும் ஆதரவளித்தே வந்திருக்கின்றனர். அப்படி சூப்பர் ஹிட்டான ரொமான்டிக் காமெடி படங்களில் ஒன்று, ‘அடுத்த வீட்டுப் பெண்’.

தனது அடுத்த வீட்டுப் பெண்ணான லீலாவை (அஞ்சலி தேவி) காதலிக்கிறார், மன்னாரு (டி.ஆர். ராமச்சந்திரன்). இசை மற்றும் பாடல் மீது அதிகப் பித்துக் கொண்ட லீலாவை, தானும் பாடல் பாடி கவர நினைக்கிறார். ஆனால் அவருக்கும் பாட்டுக்கும் அதிக தூரம் என்பதால் நண்பரான பாடகரின் (தங்கவேலு) உதவியை நாடுகிறார். பின்னணியில் தங்கவேலு பாட, மன்னாரு வாயசைக்க, அதை உண்மை என்று எண்ணி காதல் கொள்கிறாள் லீலா. ஒரு கட்டத்தில் உண்மைத் தெரிய வர, என்ன நடக்கிறது என்பது கதை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.