விடாமுயற்சியால் குட் பேட் அக்லி படத்துக்கு வந்த சிக்கல்.. ரிலீஸ் தள்ளிப்போகிறதா?..

விடாமுயற்சி திரைப்படத்தால் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது துபாயில் இருந்து வருகின்றார். கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித் இந்த ஆண்டு முழுவதும் கார்பந்தயத்தில் போட்டியிட இருப்பதாக கூறி இருக்கின்றார்.

இதற்காக தான் கமிட் செய்திருந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படமும் அவரது நடிப்பில் வெளியாகவில்லை.


விடாமுயற்சி திரைப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முழு படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.  மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்துவிட்டார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இப்படம் அந்த தேதியில் வெளியாகுமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. அதற்கு காரணம் விடாமுயற்சி திரைப்படம் தான். விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியானாலும் அதன் ஓடிடி ரிலீஸ் அதாவது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கின்றது.


இந்த சமயத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆனால் யாரும் விடாமுயற்சி திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்ப்பதற்கு முன்வர மாட்டார்கள். இதனால் பெரும் தொகை கொடுத்து வாங்கிய நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் குட் பேட் அக்லி படக்குழுவினருக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. அதில் மிகவும் வலியுறுத்தி படத்தை தள்ளி வைப்பதற்கு கோரிக்கை வைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.