யு-19 டி20 உலகக் கோப்பை: சதம் விளாசி திரிஷா சாதனை

கோலாலம்பூர்: யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான திரிஷா கோங்கடி சதம் விளாசினார். இதன் மூலம் அவர், யு-19 டி20 உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

யு-19 டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி, ஸ்காட்லாந்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான திரிஷா கோங்கடி 59 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் விளாசினார். இதன் அவர், மூலம் யு-19 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.