‘அபாய’ பிட்ச்சில் ஷமி பெற்றுத் தந்த அட்டகாச வெற்றி | நினைவிருக்கா?

ஐசிசி-யினால் மிக மோசமான பிட்ச் என்று தரப்படுத்தப்பட்ட ஜொஹான்னஸ்பர்க் பிட்சில் 2018-ம் ஆண்டின் இன்றைய தினத்தில் (ஜன.27) தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றதை மறக்க முடியாது. அதாவது, கடுமையான ஸ்விங் மற்றும் பயங்கர பவுன்ஸ் என்று இந்த டெஸ்ட் பிட்ச் டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்றதன்று என்று ஐசிசி-யே தெரிவித்து தரப்படுத்திய பிட்ச் இது. இதில் 5 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் முகமது ஷமி எடுத்து தென் ஆப்பிரிக்காவை 63 ரன்களில் வீழ்த்த உதவினார்.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமை இந்திய அணி தோற்றது. 3-வது டெஸ்ட்டான இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று தைரியமாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார் விராட் கோலி. புஜாராவும் கோலியும் போராடி அரைசதம் எடுக்க, புவனேஷ்வர் குமார் பயனுள்ள 30 ரன்களை எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 187 ரன்களை மட்டுமே எடுத்தது. மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாந்தர், பெலுக்வயோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, கேகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.