தோனி, அஸ்வின், ஜடேஜாவின் அந்த அட்டகாச ஆட்டம் | நினைவிருக்கா?

2014-ம் ஆண்டு இந்திய அணி நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தில் இருந்தது. இன்றைய தினமான 25-ம் தேதி அன்று ஆக்லாந்தில் நடந்த 3-வது ஒருநாள் பகலிரவுப் போட்டியை இந்திய அணி த்ரில் ‘டை’ செய்ததை மறக்க முடியுமா? அதுவும் கேப்டன் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா பின்னால் வந்து ஆடிய ஆட்டம் வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால் குறைந்தபட்சம் ‘டை’ செய்ய முடிந்தது.

டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் 111 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மா (39 ரன்கள், 1 பவுண்டரி 4 சிக்சர்கள்), ஷிகர் தவான் (28) மூலம் அதிரடித் தொடக்கம் கண்டு 9 ஒவர்களில் 64 ரன்கள் எடுத்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவினால் 18வது ஓவரில் 79/4 என்றும் பிறகு ரெய்னா (31) ஆட்டமிழக்கும் போது 28வது ஓவரில் 146/5 என்றும் சரிவு கண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.