BB Tamil 8 Day 105: மகிழ்ச்சி; கண்ணீர்; பிரியாவிடை; கிடைத்த அங்கீகாரம்; பைனலில் நடந்ததென்ன?

‘இந்த வீடு உங்களுக்குத் தந்தது என்ன? வரும் போது எப்படி இருந்தீர்கள், இப்போது என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்? உங்களுடைய பிம்பத்துடன் நீங்களே உரையாடுங்கள்’ என்றொரு டாஸ்க்கை டாப் 5 போட்டியாளர்களுக்கு தந்தார் பிக் பாஸ். 

அந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மட்டுமானதல்ல. பிக் பாஸின் பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும்தான். இதை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே அணுகினால் நஷ்டம் நமக்குத்தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் நிகழும் சுயபரிசோதனை, அதன் மூலம் கிடைக்கும் அக மாற்றம் போன்றவைதான் இந்த நுகர்வை பயனுள்ளதாக மாற்றும். 

எட்டு சீசன்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். ஆரம்பத்தில் சாதாரணமாக கருதிய இந்த நிகழ்ச்சி, எனக்குள் சின்னச் சின்னதாக நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதே மாதிரியான அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். கிடைத்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 105 -  Finale

இறுதிக் கொண்டாட்டத்தின் அத்தனை சடங்குகளும் சுவாரசியமாக அரங்கேறிய வெற்றி விழா இது. இந்த நிகழ்ச்சியில் நான் மிகவும் விரும்பிப் பார்ப்பது போட்டியாளர்களைக் கிண்டலடித்து நிகழும் காமெடி ஷோ. அது சில வருடங்களாக இல்லாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. 

BB Tamil 8 Day 105

இந்த சீசனின் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக வந்து மேடையின் முன்னால் வந்து நிற்க, நிகழ்வு ஆரம்பித்தது. பளபளக்கும் சிவப்பு நிற கோட், சூட்டுடன் பட்டோடபமாக வந்தார் விஜய் சேதுபதி. “இன்றைய ஸ்டார் யாரு?” என்று அவர் மக்களிடம் கேட்க “வின்னர்.. நீங்க..” என்று பதில்கள் வந்திருக்கும் போல. “எல்லோருமே ஃபெயில். அது டிராஃபி. அதை பார்த்துடுவோமா?” என்று அவர் கேட்க, இந்தச் சீசனின் வெற்றிக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. 

அமர்ந்திருந்த போட்டியாளர்களைப் பார்த்த விசே, ‘ஒரு ஆள் குறையற மாதிரி இருக்கே?” என்று டிராமாட்டிக்காக கேட்க ஜாக்குலின் மேடையில் என்ட்ரி. அவருடைய பயண வீடியோ திரையிடப்பட்டது. “உங்க பயத்தைத் தாண்டி வந்து ஆட்டத்தில் பங்கேற்றீர்கள் அல்லவா? அப்போதே நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள். நானா இருந்தா கூட அந்த ஸ்டெப் எடுத்து வெச்சிருப்பனான்னு சந்தேகம்” என்று பாராட்டிய விசே, ‘கராத்தே கிட்’ படத்தின் ஒரு காட்சியையும் மேற்கோள் காட்டினார். 

“சார்.. நீங்க ஒரு முறையாவது பாராட்ட மாட்டீங்களான்னு ஏங்கியிருக்கேன். இந்த அளவு பாராட்டிற்கு நன்றி. வெளில வந்து பார்த்தா மக்களோட அன்பும் கிடைச்சிருக்கு. இந்த ஆட்டத்திற்கு உண்மையா இருந்திருக்கேன். மக்கள் வாக்களிச்சு தொடர்ந்து 15 வாரம் என்னைக் காப்பாத்தியிருக்காங்க” என்ற ஜாக்குலின் அடுத்து சொன்ன பன்ச் அருமை. “ஜெயிச்சவன் சொல்றதைத்தான் பொதுவா கேட்பாங்க. ஆனா ஜெயிக்கணும்ன்னு நெனக்கறவன் சொல்றதைக் கூட மக்கள் கேட்டாங்க”.

ராணவ்வை விடாமல் கலாய்த்த விசே

ஜாக்குலினை போட்டியாளர்களின் நடுவில் அமர வைத்த விசே, அவர்களிடம் உரையாட ஆரம்பித்தார். “உள்ள வந்து பார்த்தாதான் தெரியுது. யாரா இருந்தாலும் அவங்க பார்வையே மாறிடும். நீங்க எது பேசினாலும் ‘இது இவங்க சொன்னாங்க’ன்னு சம்பந்தப்பட்டவர்களுக்கு கிரெடிட் அளிப்பது சிறப்பானது” என்றார் முதலில் பேசிய ஆனந்தி. ராணவ் எழுந்த போது பலத்த கைத்தட்டல். சவுந்தர்யாவைப் போலவே சேட்டைகள் செய்பவர். “நீங்க ஹோஸ்டா இருக்கும் போது என் கரியர் ஸ்டார்ட் ஆகறதுல சந்தோஷம்” என்று ராணவ் பேசி முடிக்கும் முன்னரே ‘இது அப்பட்டமான பொய். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு’ என்று ஜாலியாக கிளம்பி விட்டார் விசே. 

BB Tamil 8 Day 105

பிரேக் முடிந்து திரும்பிய விசே “வீட்டுக்குப் போனப்புறம் என்ன பண்ணீங்க?” என்று கேட்க, “பிரியாணி நிறைய சாப்பிட்டேன்” என்று சாதாரணமான பதிலை தர்ஷா சொல்ல “என் அப்பா கூட இருந்த உறவை புதுப்பிச்சிக்கிட்டேன். அந்த மாற்றத்தை பிக் பாஸ் வீடு கத்துக் கொடுத்தது” என்று மஞ்சரி சொன்னது சிறப்பான ரிப்ளை. “என் தம்பியை (முத்து) ரொம்ப மிஸ் பண்றேன்” என்று தீபக் பாசமாக சொல்ல “டாஸ்க்கை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றார் தர்ஷிகா ஸ்போர்ட்டிவ்வாக. “என்னை உடைச்சுப் போட்ட ஒரு ஆளை வெளிய போனப்புறம் தைரியமா ஃபேஸ் பண்ணேன்” என்றார் அன்ஷிதா. (யார் அது? அர்னவ்வா?!)

“ஓகே.. வீட்டு்க்குள்ள ரொம்ப நேரமா காத்திட்டிருக்கிற டாப் 5 போட்டியாளர்களை பாத்துடலாமா?” என்று விசே கேட்டவுடன், ஆங்கில இதழ்களின் ஸ்டைலான வடிவமைப்பின் செட்அப்பில் போட்டியாளர்களின் போட்டோ செஷன் காட்டப்பட்டது சிறப்பு. ஐவரும் சோபாவில் அமர்ந்திருக்க அவர்களிடம் பேச ஆரம்பித்தார் விசே. “வீட்டை க்ளீன் பண்றேன்னுட்டு என்னோட பொருளையெல்லாம் அனுப்பிச்சிட்டாங்க. பவித்ராவோட டார்ச்சர் தாங்கலை” என்று சிரித்தார் ரயான். முத்து எழும் போது பலத்த கைத்தட்டல். “வரும் போது அடிச்சி பிடிச்சி கப் ஜெயிக்கணும்ன்னு ஆவேசம் இருந்தது. இப்ப என்னடான்னா போயிட்டவங்களை மிஸ் பண்றேன்” என்றார் முத்து. 

பூண்டு சட்னி மூலம் விசேவை இம்ப்ரஸ் செய்த விஷால்


மகாலிங்கம் இசைக்குழுவினர் வீட்டிற்குள் வர, முந்தைய நாளின் இரவில் நடந்த கொண்டாட்ட தருணங்கள் காட்டப்பட்டன. ரஹ்மானின் இசையில் உருவான ‘என் காதலே’ பாடலை  முத்து பாடி, அந்தப் பாடலுக்கு ‘அஞ்சலி’ செய்தார். ‘தல கோதும் இளங்காத்து’ பாடலை சிறப்பாக ஒப்பித்தார் சவுந்தர்யா. விஷாலுக்கு டிரம் வாசிக்கும் திறமை இருப்பது இப்போதுதான் தெரிய வந்தது. 

தர்ஷிகாவின் நடன நிகழ்ச்சி முடிந்ததும், “இந்த வீட்டை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். டாப் 5 போட்டியாளர்களுக்கு ஒரு பரிசு தருவதற்காக உள்ளே செல்கிறேன்” என்றார் விசே. ‘இந்த வீட்டில் பிடித்த இடம் எது?” என்று அவர் கேட்டதற்கு “ஊஞ்சல்” என்றார் பவித்ரா. “கிச்சன்” என்ற விஷால், பூண்டு சட்னியை ‘திடீர் சமையல்’ பாணியில் தயார் செய்து அதை சாதத்தில் கலந்து விசேவிற்கு ஊட்டி விட்டார். தீபக் அண்ணனுடன் இருந்த படுக்கையை தன்னுடைய ஃபேவரிட் ஏரியாவாக குறிப்பிட்டார் முத்து. ‘கோவா கேங்’ உருவான சரித்திர சம்பவ இடத்தை சுற்றிக் காட்டினார் சவுந்தர்யா. 

BB Tamil 8 Day 105

“நான் வீட்லயே இருக்க மாட்டேன். இருந்தா ‘என்னம்மா உடம்பு சரியில்லையான்னு கேட்பாங்க’ என்று ஜோக் அடித்த சவுந்தர்யா, விசேவின் கவனம் திசை திரும்பியதைப் பார்த்து “முதல்ல இருந்து சொல்லட்டுமா?” என்றார். (என்னம்மா இது சூட்டிங்கா என்ன? ரெண்டாவது டேக் போக?!) “எப்படி திடீரன்னு டேக் ஆஃப் ஆனீங்க?” என்று ரயானிடம் விசாரிக்க அதற்காக முத்துவிற்கு கிரெடிட் தந்தார் ரயான். ஐவருக்கும் புகைப்படங்களை கையெழுத்திட்டு பரிசாக அளித்து மகிழ்வித்தார் விசே. 

ரயான் ஐந்தாவது இடம் - முத்துவிற்கு நெருக்கடி தந்த ஆட்டக்காரன்

விசே விடைபெற்று வெளியேறியவுடன் டாப் 5-ல் இருந்து ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய நேரம் வந்தது. சீட்டு குலுக்கலின் மூலம் ரயான் வெளியேற்றப்பட்ட செய்தி வந்த போது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். முத்துவிற்கு கடுமையான போட்டியைத் தந்த ரயான், ‘வின்னர் ஆவார்’ என்று கருதப்பட்டவர். என்றாலும் வைல்ட் கார்ட் மூலமாக வந்து ஐந்தாவது இடத்திற்கு மின்னல் வேகத்தில் முன்னேறியது சிறப்புதான். மேடைக்கு வந்தவுடன் விசேவுடன் பேசி விட்டு ஜாக் பக்கத்தில் உள்ள இருக்கையை அவர் தோ்வு செய்து அமர்ந்தது சிறப்பு. 

போட்டியாளர்கள் விசேவிடம் கேள்வி கேட்கும் நேரம். “சேஃப் கேம்.. ஆடறதா சொல்றாங்க. உங்க பார்வைல அது என்ன?” என்று தர்ஷா குப்தா கேட்க, அதை விளக்கிய விசே “எல்லோராலயும் சத்யா, ஜெப்ரி மாதிரி இருக்க முடியுமா?” என்று அவர்களை ஊமைக்குத்தாக போகிற போக்கில் குத்தினார். “உங்களை கமல் சார் ஹோஸ்டிங்கோட கம்ப்போ் பண்ணாங்க. சிலருக்கு சப்போர்ட் பண்ணதா சொல்றாங்க” என்கிற துணிச்சலான கேள்வியை ரியா கேட்க “இப்படித்தான் நடக்கும். சவுந்தர்யாவை விஷால் கிண்டல் செய்த விஷயத்தில் அவரை இன்னமும் கூட கடினமாக கேட்டிருக்க முடியும். ஆனால் ஒருவருக்கு தண்டனை கொடுக்கறது என் நோக்கமில்லை. யாரையும் நான் சப்போர்ட் செய்யவில்லை” என்று அவற்றை மறுத்தார் விசே. 

BB Tamil 8 Day 105

ராணவ் எழும் போதெல்லாம் கைத்தட்டல் கேட்கிறது. “எங்க கிட்ட இருந்து என்ன எடுத்துட்டுப் போவீங்க?” என்று வித்தியாசமான கேள்வியை அவர் கேட்க “க்யூட்டா குழப்பம் பண்றது எப்படின்னு கத்துக்கிட்டேன்” என்று அந்தப் பந்தை ராணவ்விடமே திருப்பிடியத்தார் விசே. “அப்புறம் சார். வருங்காலத்துல நீங்களும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்றதுக்கு கூட சூழல் அமையலாம்” என்று விசே சொல்ல மக்களின் உற்சாகமான கூச்சல் கேட்டது. ஒரு இடைவெளி தந்த விசே “அப்படியொரு படமே வேணாம்ன்னு கிளம்பிடுவேன்” என்று விசே அடித்த கிண்டலுக்கு சிரித்தபடி அமர்ந்தார் ராணவ். 

“உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பவர் கிடைச்சா, எவிக்ட் ஆனவங்கள்ல இருந்து யாரைக் காப்பாத்துவீங்க?” என்று தீபக் கேட்க “உங்க எல்லோரையுமே பிடிக்கும்” என்ற விசே அனைத்துப் போட்டியாளர்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகளை ஒரே மூச்சில்  வரிசையாக சொன்னது சிறப்பான காட்சி. 

முயல் - ஆமை கதையில் முயல் விடை பெற்ற நேரம்


இரண்டாவது எவிக்ஷனுக்கான நேரம். ‘ஒரு காட்டுல சிங்கம், முயல், யானை இருந்துச்சாம்’ என்கிற மாதிரியான கதையை பக்கம் பக்கமாக எழுதி, அதை எக்ஸாம் ஹால் போல தனித்தனியாக அமர வைத்து வாசிக்க வைத்தார் பிக் பாஸ். க்ரூப் ஸ்டடி போல அதை கோரஸாக ‘கடனே’ என்று படித்தார்கள். ‘யப்பா. டேய்.. இந்த ஐடியாவையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா.. ஒரே வரில சொல்ல வேண்டியதுதானே?’ என்பதாக அவர்களின் மைண்ட் வாய்ஸ் இருந்திருக்கலாம். 

கதையின் இறுதியில் பவித்ராவிற்கு மட்டும் ஸ்பெஷலான வரி இருந்தது. எனவே பவித்ரா என்கிற முயலின் பயணம் அத்துடன் நிறைவு பெற்றது. இன்முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டு கிளம்பினார் பவித்ரா. ‘கதையே புரியலையே?” என்ற சவுந்தர்யாவிடம் “அதனாலதான் கதையா எழுதி வெச்சிருக்காங்க” என்று கிண்டலடித்தார் முத்து. 

BB Tamil 8 Day 105

மேடைக்கு வந்த பவித்ரா, “என் வளர்ச்சிக்காக, என் கரியருக்காக உள்ளே வந்தேன். ஆனா என்னை எனக்கே இந்த வீடு புரிய வெச்சிருக்கு”என்று நெகிழ்ந்தார். “ஏன் இந்த இடத்துக்கு வந்தீங்கன்னு ஒரு ஐடியா இருக்கா?” என்று விசே கேட்க “ரொம்பவே பொறுமையா இருந்துட்டேன். பொறுமை நல்ல குணம்தான். ஆனா பேச வேண்டிய இடத்துல பேசியிருக்கணும்” என்று வாக்குமூலம் தந்தார் பவி. 

வீட்டிற்குள் இருந்த டாப் 3 போட்டியாளர்களிடம் பேசிய விசே “உங்களுக்காக ஒரு பொருளை உள்ளே அனுப்பிச்சிருக்கேன். பாருங்க” என்றார். அது வெற்றிக் கோப்பை. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ என்கிற மாதிரி ‘இதுக்காகத்தானே இத்தனை போராட்டம். இந்தக் கோப்பையுடன் உரையாடுங்கள். அப்போதுதான் அது உங்களிடம் வரும்” என்று பிக் பாஸ் சொல்ல, மூவருமே தங்களின் ஆத்மார்த்தமான உரையாடலை கோப்பையுடன் நிகழ்த்தினார்கள். 

“நீ வெறும் கோப்பையல்ல. மக்களுடைய அன்பின், அங்கீகாரத்தின் அடையாளம். இதுக்காக நிறைய போராடியிருக்கேன். என்னை வந்து சேர்வாய் என்று நம்புகிறேன்” என்றார் முத்து. “சில பசங்களை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்” என்று கப்புடன் ரொமான்ஸ் செய்தார் விஷால். “என்னை பிடிச்சா வா.. இல்லைன்னா போய் தொலை” என்கிற மாதிரி காமெடி செய்தார் சவுந்தர்யா. 

போட்டியாளர்களுக்கு சிறப்பு விருதுகள்

எவிக்ட் ஆன போட்டியாளர்களுக்கு விருது வழங்கும் நேரம். ‘காப்டன் ஆஃப் தி சீசன்’ என்கிற விருது யாருக்கு என்பதை யூகிப்பது சிரமமில்லை. அது தீபக். “உங்களாலதான் இது கிடைச்சது” என்று சக போட்டியாளர்களிடம் அந்தப் பெருமையைப் பகிர்ந்து கொண்டார் தீபக். ‘மாஸ்டர் ஆஃப் ஸ்ட்ராட்டஜி’ விருது ரவிக்கு கிடைக்கும் என்று பார்த்தால் அது ஆனந்திக்காம். 

‘அட்டென்ஷன் சீக்கர்’ விருது யாருக்கு? வேறு யார்.. நம்ம ராணவ்தான். “எல்லோருமே அதுக்காகத்தானே வந்தோம்?” என்று ராணவ் வாதாடிப் பார்க்க, சார்.. இது காம்பிமெண்ட் சார். நீங்க பொழக்க தெரிஞ்ச குழந்தை. நமக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களைத்தானே உரிமையா கிண்டல் பண்ணுவோம். அப்படித்தான் இது” என்று சமாதானம் செய்தார் விசே. 

BB Tamil 8 Day 105

‘டாஸ்க் பீஸ்ட்’ என்றதுமே ரயான் எழுந்த வர “உங்க பேரையே சொல்லலையே.. ஏன் வந்தீங்க?” என்று கலாய்த்த விசே, ‘போங்க சார்..’ என்று வெளியே அனுப்பினார். பிறகு சிரித்துக் கொண்டே ‘வாங்க சார்… உங்களுக்குத்தான்’ என்று விருதை தந்து சபையை கலகலப்பூட்டினார். ‘கேம் சேஞ்சர்’ என்கிற பொருத்தமான விருது மஞ்சரிக்கு கிடைத்தது. 

‘சூப்பர் ஸ்ட்ராங்’ என்கிற விருதை ஜாக்குலினுக்கு தந்த விசே “இந்த லாஸ்ட் பென்ச்சர்ஸ் கலாட்டா பண்ணுவாங்கள்ல.. அந்த மாதிரி சத்யாவும் ஜெப்ரியும் நீங்க போகும் போது ஒரு கலாட்டா பண்ணாங்க” என்று போட்டுக் கொடுக்க “தள்ளி நின்னு அடிக்கறவங்களைப் பார்த்திருக்கேன். கூடவே நின்னு அடிச்சிருக்காங்க” என்று அடிபட்ட முகத்துடன் ஜாக் சொல்ல “அய்யோ.. ஜாக்.. அது உங்களைப் பார்த்து சி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.