காயம் காரணமாக சோபி விலகல்: ஆர்சிபி மகளிர் அணியில் சார்லி டீன்
பெங்களூரு: காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மகளிர் அணியிலிருந்து முன்னணி வீராங்கனை சோபி மோலினக்ஸ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீராங்கனைகள் ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீராங்கனையான சோபி மோலினக்ஸ் இடம்பிடித்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


