திருப்பதி மலையை முழந்தாளிட்டு ஏறிய நிதிஷ் குமார் ரெட்டி!

சமீபத்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கண்டுபிடிப்பாகிய நிதிஷ் குமார் ரெட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலையை முழந்தாளிட்டு ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது.

பெர்த் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என இழந்தனர். இந்த தோல்வியுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தனர். தோல்வியுற்ற போதிலும் தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டியை பாராட்டாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவரது பங்களிப்பு அபரிமிதமாக அமைந்தது.

மெல்பர்னில் அவர் அடித்த சதம் மிக அருமை என்று உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் விதந்தோதி வருகின்றனர். மைதானத்தில் இருந்த அவரது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.