‘எந்த இடத்திலும் பேட் செய்ய தயார்!’ - ஸ்ரேயாஸ் ஐயர் ‘கம்பேக்’ உறுதி

மும்பை: அணிக்காக பேட்டிங் ஆர்டரில் எந்த இடத்திலும் பேட் செய்ய தான் தயாராக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் பெற்றால் அது தனக்கு பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் பிசிசிஐ, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை அறிவிக்க உள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கான அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரும் இதை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.