“ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள்!” - நடிகர் வடிவேலு கலகல பேச்சு

மதுரை: ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு நகைசுவையாக கூறினார்.

மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில், வருமானவரித் துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. முதன்மை விருந்தினராக வருமானவரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராவ், முதன்மை ஆணையர் வசந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நகைசுவை நடிகர் வடிவேலு பங்கேற்று பேசும்போது, ‘எனக்கு நாராயணன் என்று எனது மாமா பெயர் வைத்தார். என்னுடைய உடல்நிலை சரியின்றி போனதால் எனது அம்மா வடிவேலு என பெயர் வைத்தார். தற்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தது மகிழ்ச்சி. ஆனால் மாமன்னன் படத்தை போல கஷ்டத்தை அனுபவித்தவன் நான், அதனாலே நகைச்சுவை நடிகனாக மாறினேன்,’ என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.