இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

