லாபத்தில் பங்கு: ராஜமவுலி - மகேஷ் பாபு திட்டம்
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் ராஜமவுலி. இப்படம் தான் இந்தியாவில் தயாராகும் அதிகப் பொருட்செலவினைக் கொண்ட படம் என்று பெயரெடுக்கவுள்ளது. இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளில் உள்ள காடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ராஜமவுலி – மகேஷ் பாபு இருவருமே சம்பளம் எதுவுமே வாங்கவில்லை. மாறாக இருவரும் லாபத்தில் 40% சம்பளம் என்ற முறையில் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பதால், இதிலேயே பல கோடிகள் சம்பளமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

