‘அரசர் மாண்டு விட்டார்’ - விராட் கோலியை விமர்சித்த சைமன் கேட்டிச்
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் விராட் கோலி ஆட்டமிழந்த போது வர்ணனையாளராக இருந்த சைமன் கேட்டிச் தெரிவித்த கருத்து வைரலாகி உள்ளது.
கடைசி நாள் ஆட்டத்தில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தப் போட்டியில் இந்தியா விரட்டியது. இதில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் ஆஸி. பவுலர்கள் வீசிய லைனில் மீண்டும் ஒருமுறை தனது விக்கெட்டை கோலி பறிகொடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


