‘ராஜாகிளி’ - திரை விமர்சனம்

கை வைத்த தொழில்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டுபவர் முருகப்பா சென்ராயர் (தம்பி ராமையா). மனைவி இருக்கும்போதே, தனது ஊழியரான வள்ளிமலரை இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். இவரது பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் மற்றொரு பெண்ணான விசாகா, தனது காதல் கணவன் ஆல்பர்ட்டின் (பாடகர் கிருஷ்) குடும்ப வன்முறையிலிருந்து தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறார். முருகப்பாவின் அறிவுரைக்கு அடங்க மறுத்து பிளாக்மெயில் செய்யும் ஆல்பர்ட்டை, கொலைசெய்யும்படி தன் ஆட்களை அனுப்புகிறார். பிறகு முருகப்பாவின் வாழ்க்கை என்னவாகிறது என்பது கதை.

இக்கதையில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே என்கிற பொறுப்புத் துறப்புடன் தொடங்கும் படம், 15-வது நிமிடத்திலேயே, ‘இது அந்த தொழிலதிபரின் கதை அல்லவா?' என்று உணர வைத்துவிடுகிறது. உண்மையுடன் தேவையான அளவுக்குக் கற்பனையையும் குடும்ப சென்டிமென்டையும் கலந்து த்ரில்லர் படமாகக் கொடுத்திருக்கிறார், இதன் கதை, வசனம், பாடல்கள், எழுதி இசையமைத்து, முருகப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.