“எனக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினையா?” - தெளிவுபடுத்திய ஹர்பஜன் சிங்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் திடீரென்று விலகியதையடுத்து, பலதரப்பட்ட யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தனக்கும் அஸ்வினுக்கும் சண்டை என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது குறித்து ஹர்பஜன் சிங் யூடியூப் சேனலில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘அஸ்வின் ஒரு ஆகச் சிறந்த பவுலர்’ என்று புகழாரமும் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியது: “சமூக வலைதளங்களில் எனக்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவேன். எனக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடோ அல்லது சண்டையோ இருந்தால், என்ன பிரச்சினை என்று அவரிடமே நேரடியாகக் கேட்டு விடக்கூடியவன் தான் நான்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


