“எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறேன்!” - நடராஜன்

தருமபுரி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் விளையாடுவேன் என தருமபுரியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார். தருமபுரியில் நடந்த விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கிளை திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதிகப்படியாக கிராமப்புறங்களில் இருந்து வீராங்கனைகள் வருகிறார்கள். நவீன கிரிக்கெட்டில் மகளிரும் நன்றாக விளையாடி வருகிறார்கள். நாளுக்கு நாள் மகளிர் அணியின் விளையாட்டுத் தரம் மேம்பட்டு வருகிறது.ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் 7 ஆண்டுகள் இருந்தேன். தற்போது டெல்லி அணிக்கு விளையாட உள்ளேன். இதில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.