டிசம்பர் 29-ல் புரோ கபடி இறுதிப் போட்டி
புனே: புரோ கபடி லீக் 11-வது சீசனின் 2-வது கட்ட போட்டிகள் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி இறுதிப்போட்டி வரும் டிசம்பர் 29-ம் தேதி புனேவில் உள்ள பாலேவாடி விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக டிசம்பர் 26-ம் தேதி பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களும் புனேவிலேயே நடத்தப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


