இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அதியற்புத நாள்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ‘சம்பவம்’

பெர்த் டெஸ்ட் 3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அயலக மண்ணில் செலுத்தாத ஆதிக்கத்தை செலுத்தியதை பார்க்க முடிந்தது. இந்த ஆதிக்கத்தின் பின்னணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, ராகுல், பும்ரா ஆகிய நால்வர்கள் உள்ளனர்.

3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் உள்ளது. இதில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த கண்டிஷனில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பவுலர்கள் லெந்த்தைக் கண்டுபிடிக்க திணறியபோது ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு ஒரு விதத்தில் பழைய மேற்கு இந்தியத் தீவுகளை விடவும் ஆவேசமாக இருந்ததோடு சரியான லெந்த்தைக் கண்டுப்பிடித்து இந்தப் பிட்சில் 2 எல்.பி.டபிள்யூக்களை எடுத்தது அபாரமான பந்து வீச்சு.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.