சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு சாதகம் என்ற மரபு எங்கே போனது?- கே.எல்.ராகுலின் வேதனை!

பெர்த் டெஸ்ட் போட்டி கிரீன் டாப் பிட்சில் தொடங்கி உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் என்று தடுமாற்றமான தொடக்கம் கண்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது நடுவர் தீர்ப்பு என்னும் கோடரி அவர் மேல் விழுந்து வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் அவர் வெளியேற நேரிட்டது.

ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்ப் பந்து ஒன்று அவரை குறுக்காகக் கடக்க பந்து மட்டையைக் கடக்கும் போது ராகுலின் மட்டை கால்காப்பில் பட்டது, இரண்டு சவுண்ட் கேட்டதுபோல் தெரிய ஆஸ்திரேலிய வீரர்கள் முறையீடு எழுப்பினர், களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. கமின்ஸ் மூன்றாவது நடுவர் தீர்ப்புக்கு முறையிட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.