கனவை உயிர்ப்பிக்க உழைத்து வாகை சூடிய ‘களிமண் தரை ராஜா’ ரபேல் நடால் வெற்றிக் கதை!

டென்னிஸ் விளையாட்டுக் களத்தில் இரண்டு தசாப்தங்கள் ஆதிக்கம் செலுத்தியவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாம்பவான் ரபேல் நடால். தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் ‘குட்பை’ சொல்லி இருந்தாலும் களத்தில் விட்டுச் சென்றுள்ள நினைவுகளை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது.

இந்த நூற்றாண்டின் சிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகிய மூவரும் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் டென்னிஸ் உலக மும்மூர்த்திகள் என்றும் சொல்லலாம். மூவரும் டென்னிஸ் களத்தில் சம காலத்தில் ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாக சமர் புரிந்தவர்கள். அதுவே அவர்களின் ஆட்டத்திறனுக்கு சான்று. இதில் பெடரர் கடந்த 2022-ல் ஓய்வு பெற்றார். இப்போது நடாலும் ஓய்வு பெற்றுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.