முதல் முறையாக 5 விக்கெட்டுகளை ரஞ்சியில் வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்!

சச்சின் டெண்டுல்கரின் மகனும் கோவா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், ரஞ்சி கோப்பை போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இது அவரது முதல் 5 விக்கெட் ஸ்பெல் ஆகும். தனது 17-வது முதல் தரப்போட்டியில் முதல் முறையாக அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்களே வீசிய அர்ஜுன் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரது இந்த ஆக்ரோஷ பந்து வீச்சை அடுத்து அருணாச்சலப் பிரதேச அணி 84 ரன்களுக்குச் சுருண்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.