“தயவு செய்து கம்பீரை செய்தியாளர்களிடம் நெருங்க விடாதீர்கள்; உளறுகிறார்” - சஞ்சய் மஞ்சுரேக்கர்

புது டெல்லி: பார்டர் கவாஸ்கர் டிராபி, நியூஸிலாந்துக்கு எதிராக 3-0 முற்றொழிப்பு படுதோல்வி ஆகியவை பற்றியும் விராட் கோலி, ரோஹித் சர்மா மோசமான பேட்டிங் நிலை பற்றியும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, கம்பீர் அளித்த பதில் சஞ்சய் மஞ்சுரேக்கர் உள்ளிட்டோரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

‘விராட் கோலி கடந்த 5 வருடத்தில் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது சரியல்ல. இது ஒரு கவலையளிக்கும் விஷயம்’ என்று ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருந்தார். ரோஹித் சர்மாவின் ஃபார்ம் இன்மை குறித்தும் அவர் அச்சம் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்கள் கம்பீரிடம் “விராட் கோலி, ரோஹித் சர்மா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கம்பீர் அவர்களே?” என்று பொருள்பட கேள்வி எழுப்பினர். ஆனால் கம்பீர் அது புரியாமல் இது ஏதோ பாண்டிங்கின் கருத்துப் பற்றிய கேள்வி என்று தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு, “இந்திய கிரிக்கெட் பற்றி பாண்டிங்கிற்கு என்ன வந்தது? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைப் பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும்” என்று தெனாவட்டாகப் பதில் சொன்னார் கம்பீர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.