‘விடாமுயற்சி கொண்டவர்’ - இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யஷ் தயாள் குறித்து ராபின் உத்தப்பா

சென்னை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் இளம் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாள். இந்நிலையில், அவர் விடாமுயற்சி கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நடத்திய மீடியா ரவுண்ட் டேபிள் நிகழ்வில் வல்லுநராக உத்தப்பா பங்கேற்றார். அதில் அவர் தெரிவித்தது, “ஐபிஎல் 2023-ல் யஷ் தயாள் பந்து வீச்சை ரிங்கு சிங் விளாசி இருந்தார். அதன் பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணி அவருக்கு அந்த சீசனில் நம்பிக்கை தரும் வகையில் உறுதுணையாக நின்றது என நான் கருதுகிறேன். அப்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அவருக்கு நம்பிக்கை தந்தனர், ஆதரவாக இருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.