விஜய் சங்கர் சதம் விளாசல்: சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு அணி

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் உள்ள சத்தீஸ்கர் - தமிழ்நாடு அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் சத்தீஸ்கர் 500 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு 77.2 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ-ஆன் ஆனது.

இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 76 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.