டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம்: தென் ஆப்பிரிக்க அணி 307 ரன்கள் குவிப்பு

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் சதம் விளாசினார்கள்.

சட்டோகிராமில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கேப்டன் எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி களமிறங்கினார்கள். நிதானமாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 55 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில், மொமினுல் ஹக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.